Saturday, June 26, 2010

புராஜெக்ட் X - புத்தம் புதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்

கடந்த இரண்டு மாதங்களாக மர்மமாக இருந்த புதிர் (புராஜெக்ட் எக்ஸ்) விலகியதில் இருந்து ஆர்வமும் அதனுடன் தொற்றிக்கொண்டுவிட்டது. ஆம், ஜேம்ஸ் பாண்டின் புதிய நாவல் வருகிறது என்றால் என்னை போன்ற நெடுநாள் ரசிகர்களால் காத்திருக்கவே இயலாது.

இந்த விஷயம் புதிதாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு, இதோ கோர்வையான சம்பவங்கள்: உலகப்புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர் இயான் பிளெம்மிங். இவரது மறைவுக்கு பின் இந்த பாத்திரத்தின் நாவலாக்கம் சற்று தடை பட்டு இருந்தாலும் இப்போதும், அப்போதுமாக சில பல எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள். இயான் பிளெம்மிங் அவர்களின் பிறந்த நாளாகிய மே 28 ஆம் தேதி. அதற்க்கு சரியாக ஒரு வாரம் முன்பிருந்தே அவரின் அதிகாரபூர்வமான தலத்தில் புராஜெக்ட் எக்ஸ் பற்றிய மர்மமான விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.

Jeffery_Deaver

படத்தில் காணப்படும் ஜெப்ரி டீவர் என்னும் இந்த புகழ்பெற்ற எழுத்தாளர்தான் இனிமேல் இரவாப்பெயர் பெற்றுள்ள ஜேம்ஸ் பாண்ட் கதைகளை நமக்கு அளிக்கப்போகிறவர். இவர் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இயான் பிளெம்மிங் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் எழுதிய கார்டன் ஆப் பீஸ்ட்ஸ் ஈனும் அந்த நாவல்தான் அந்த அரிய விருதினை தட்டி சென்றது. (நாவல் என்றவுடன் ஏதோ நம்ம ஊரில் வரும் பாக்கெட் நாவல், கிரைம் நாவல் என்று எண்ணி விடாதீர்கள், இவை எல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய நாவல்கள்தான் - அட் லீஸ்ட் பக்கங்களின் எண்ணிக்கையிலாவது). இல்லையென்றால் நம்ம ராஜேஷ் குமார், ராஜேந்திரகுமார் ரசிகர்கள் எல்லாம் சண்டைக்கு வேற வந்துடுவாங்க. அதனால் இப்படி ஒரு டிஸ்கிளைமர்.

சமீப வருடங்களாக ஜூனியர் ஜேம்ஸ் பாண்ட் என்றொரு நாவல் வரிசை ஆங்கிலத்தில் வந்துக்கொண்டு PROJECTXTitleஇருக்கிறது.  அந்த தொடரின் ரசிகர்கள் எல்லாம் ஒருவேளை இனிமேல் ஜூனியர் வரிசை கதைகள் வராதோ என்றெண்ணி ஐயம் கொண்டனர். ஆனால், அந்த வரிசையும் தொடர்ந்து வரும் என்று அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த ஜூனியர் ஜேம்ஸ் பாண்ட் கதை வரிசையானது நம்முடைய கதாநாயகன் உளவாளியாகுவதர்க்கு முன்பு நிகழ்திய சாகசங்களை பற்றி சொல்லப்படும் ஒரு கதைத் தொடராகும். நானும் ஒன்றிரண்டு கதைகளை படித்துள்ளேன். சிறப்பாக ஒன்றுமில்லை. அதே சமயம் மொக்கையாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

project x cover

இதோ, இதுதான் அடுத்து வரப்போகும் ஜேம்ஸ் பாண்ட் நாவலின் அட்டைப்படம். அடுத்த வருஷம் இயான் பிளெம்மிங் பிறந்த நாளில் (28th May 2011) வரப்போகும் இந்த புத்தகத்தை நீங்கள் இப்போதே இணைய தளத்தில் ஆர்டர் செய்யும் வசதியும் உள்ளது. இங்கே சென்று பாருங்கள்.

ஜெப்ரி டீவர் இப்போதே சுமார் 45 தலைப்புகளை தயார் செய்து வைத்துள்ளாராம். ஏனெனில் ஜேம்ஸ் பாண்ட் நாவல்களானாலும் சரி, திரைப்படங்களானாலும் சரி - தலைப்புகள் வித்தியாசமாகவும் ஆச்சர்யப்பட வைக்குமளவுக்கும் இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. அந்த பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஒரு சிறப்பான பெயரை விரைவில் தேர்வு செய்து முடிவெடுப்பாராம் ஜெப்ரி.

அதே சமயம், மே மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால் அதே தேதியில் புத்தகம் வருமா அல்லது அதற்க்கு முன்பே (சந்தைப்படுத்த) வந்துவிடுமா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்படி நடந்தாலும் உலகமயமாக்கம் மற்றும் சந்தை மோகம் கொண்ட இன்றைய நிலையில் அது ஒரு சாதாரண விஷயமே.

அடுத்தட பதிவில், ஜேம்ஸ் பாண்டின் வாழ்கையும், ஆரம்ப கால நாட்களும்.